திருவிழானு வந்தா பாட்டு சத்தம் கேக்கும்
ஊருக்குள்ள மகிழ்ச்சி மடை வெள்ளமா திறக்கும்
ராட்டினத்து கூட்டம் கலகலன்னு சிரிக்கும்
துப்பாக்கியை தூக்கி பலூனெல்லாம் வெடிக்கும்
ஊருக்குள்ள வந்து பக்கத்து ஊரு எல்லாம் கலக்கும்
ஊரை விட்டு போன சொந்தமெல்லாம் திரும்பும்
மறக்க முடியுமா திருவிழாக் காலம்
மகிழ மகிழ திருவிழாக் கோலம்
மறக்க முடியுமா திருவிழாக் காலம்
மகிழ மகிழ திருவிழாக் கோலம்
முளைப்பாரி தூக்கி பெருங்கூட்டம் போகும் பாரு
சுத்தி சுத்தி வந்து அது பாடும் பாட்ட கேளு
பால் குடத்தை தூக்கி வேண்டுதலோ நூறு
தீ மிதிச்சு நன்றி சொல்லி போகும் பாரு
பக்தி பாட்டு கேக்கும்
ஒரு குத்து ஆட்டம் ஆடு
புதுசு புதுசா கடைக
பொருளை வாங்கி சேரு
கரகாட்டம் பாக்க ஒரு கூட்டம் அது பாரு
இன்னும் பழைய கலைகள் காக்குறது ஊரு
பட்டிமன்றம் நைட்டு கலகலன்னு கூடும்
வாய்விட்டு சிரிச்சு யோசனைதான் ஜோரு
திருவிழா வந்தா தான் சாமி தேரு
மறுபடி புதுசா தான் பிறக்கும் ஊரு
திருவிழா வந்தா தான் நம்ம ஊரு
மறுபடி புதுசா தான் பிறக்கும் பாரு