Sunday, 22 February 2026

எனக்கென பிறந்தது



எனக்கென பிறந்தது
 
உலகம் - நான் 
வரும்வரை நடந்ததே  
பெருந்தவம்! 


நொடிக்கென நிகழ்வுகள் 

தினம் - எனை 

வார்த்திட நடப்பதே அதும்! 


நிகழ்ந்தன கேட்டிட 

கதை, புதையலை 

கொட்டிடும் தினம்!


நான் நடந்திட 

திளைத்திடும் தரை! 

ஓடிட நீட்டுமே  

கரம்! 


தமிழ் சொற்களில் 

வழிந்திட சுவை... 

கேட்டிட தழுவிடும்  

வளி!


பல தூரமே 

உடைத்திடும் படி 

தினம் அறிவியல் 

செய்திடும் பணி! 



அதி காலையில் 

விழித்திட ஒளி! 

தாலாட்டவே மிதந்திடும் 

நிலவொளி!


எனை சுற்றியே 

சுற்றிடும் படி 

பிறந்ததோ பூமியுமடி!


என் விழி பட்டிடா 

பாகங்கள் தனில்... 

நோன்புகள் கிடந்தொரு

தவம்!


எனக்கென பிறந்தது 

உலகம் - நான் 

வரும்வரை காத்ததே   

தவம் 


நான் பிறந்திட 

கிடைத்தன வரம் 

என் கூடவே வாழ்ந்திட 

நிதம்

வேண்டுதல் கேட்டிடும் 

மண்டிலம் 

 

எனக்கென பிறந்தது 

உலகம் - எனை 

பெற்றதே பெற்றதே 

அதும்!

No comments:

Post a Comment

புதுசா பிறக்கும் ஊரு

திருவிழானு வந்தா பாட்டு சத்தம் கேக்கும் ஊருக்குள்ள மகிழ்ச்சி மடை வெள்ளமா திறக்கும் ராட்டினத்து கூட்டம் கலகலன்னு சிரிக்கும் துப்பாக்கியை தூக்...