காகிதமா
புளகாங்கிதமா
பழங்காலமென
உணர்வாகிடுமா?
புது வாக்கியங்கள்
உருவாக்கி வந்து
சரம் தொடுத்ததொரு
அரும் சொற்றொடர்கள்
அடுக்கி வைத்து
அசை போட்டிடுமே
மனக்கோலமது
ராக்காலங்களில்
மெல்லிசையை யார்
பின்னிசைக்க
நெகிழ் நேரமொரு
தாலாட்டிடுமே
இன்னுமொரு
நாள் வருமே
புதிதாக தரும்
புது புத்துணர்ச்சி
இது போல
பல நாள் பிறர்க்கும்
கிடைத்தாகவே மனம்
வேண்டிக்கொண்டேன்
இசைக்கவல்ல
இசை கருவியென
தெரிந்தவர்கள் பல
பண்பிலுயர் மாநட்பு
அது எனக்கும் உண்டு
No comments:
Post a Comment