Friday, 27 February 2026

மாநட்பு


காகிதமா 

புளகாங்கிதமா 

பழங்காலமென 

உணர்வாகிடுமா?



புது வாக்கியங்கள் 

உருவாக்கி வந்து

சரம் தொடுத்ததொரு 

அரும் சொற்றொடர்கள் 



அடுக்கி வைத்து 

அசை போட்டிடுமே 

மனக்கோலமது 

ராக்காலங்களில் 



மெல்லிசையை யார் 

பின்னிசைக்க 

நெகிழ் நேரமொரு 

தாலாட்டிடுமே 



இன்னுமொரு 

நாள் வருமே 

புதிதாக தரும்

புது புத்துணர்ச்சி 



இது போல 

பல நாள் பிறர்க்கும் 

கிடைத்தாகவே மனம் 

வேண்டிக்கொண்டேன் 



அந்த நல்லிசையை 

இசைக்கவல்ல

இசை கருவியென 

தெரிந்தவர்கள் பல 

பண்பிலுயர் மாநட்பு 

அது எனக்கும் உண்டு 




No comments:

Post a Comment

புதுசா பிறக்கும் ஊரு

திருவிழானு வந்தா பாட்டு சத்தம் கேக்கும் ஊருக்குள்ள மகிழ்ச்சி மடை வெள்ளமா திறக்கும் ராட்டினத்து கூட்டம் கலகலன்னு சிரிக்கும் துப்பாக்கியை தூக்...