விழ விழ விழுதினை
விதைத்ததுன் வாக்குகள்!
எழுபவர் நிலைத்திட
பிடிப்பதுன் ஊன்றுகோல்!
சிறு சிறு முயற்சியால்
நீ கட்டிய கோட்டையில்
பெரிதொரு வாழ்வினை
பெருகவே வாழ்த்துக்கள்!
உடனிரு தருணங்கள்
உன் சிந்தையால் பயன்பெற,
வாழ்த்திடும் எம்நெஞ்சை
வாகையே சூடினாய்!
கருத்தெலாம் நாளுமே
தேடியே திரட்டுவாய்!
சேர்த்ததை பகிர்ந்ததில்
சேர்த்திட்டாய் பெரும்பலம்!
பொறுப்புடன் நடந்திடும்
நேர்மையே உன் பலம்!
வெறுப்புகள் வீசினால்
உன் பொறுப்பதை மாய்த்திடும்!
உண்மையை பேசிடும்
உன் எழுத்துகள் சொல்லிடும்
நீ பட்டதை, பெற்றதை
பெறவேண்டி விட்டதை!
சிலர் நீடூழி வாழ்வதில்
உலகுக்கு பெரும்பயன்!
உலகமே கற்றிடும் அவர்
வழியது ஆகிடும்!
பெரும்பயன் வேண்டியே
வாழ்த்துவோம்
நீ நீடூழி வாழவே!
No comments:
Post a Comment